Tag Archives: kolambu

ஆட்டுக் குடல் குழம்பு

தேவை:
ஆட்டுக்குடல் – 1
மல்லி – 2 தேக்கரண்டி
வெங்காயம் அறுத்தது – 1 கையளவு
உப்பு – தேவையான அளவு
மிளகாய் வற்றல் – 6
சீரகம் – 3 தேக்கரண்டி
இஞ்சி – 1 சிறு துண்டு
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை:
மூன்று கப் தண்ணீரிவ் இஞ்சி சேர்த்து குடலைப்போட்டு 15 நிமிடம் வேக வைக்கவும். வத்தல், சீரகம், மல்லியை அரைத்து வெங்காயம் உப்பு கலந்து வேகும் குடலில் குழம்பு நன்கு கொதித்து குடல் வெந்ததும் வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு பொறித்துக் குழம்பில் ஊற்றி இறக்கவும்.

 

கறிக் குழம்பு

தேவையான பொருட்கள்:
கறி – அரை கிலோ
சின்ன வெங்காயம் – 200 கிராம் (பொடியாக வெட்டவும்)
நாட்டுத் தக்காளி – 5 பொடியாக வெட்டவும்
இஞ்சி, பூண்டு விழுது – 2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 4 டீஸ்பூன்
மல்லித்தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
சோம்பு, பட்டை – தாளிப்பதற்கு தேவையானது
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை:
குக்கரில் எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை தாளித்து, கருவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கி, இஞ்சி, பூண்டையும் சேர்த்து வதக்கி, தக்காளி, கறி, மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய்த் தூள் எல்லாவற்றையும் போட்டு எண்ணெய் கக்கும் வரை வதக்கி, பச்சை வாசனை போன பிறகு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு நன்றாக வேக விடவும். கறி நன்றாக வெந்த பிறகு கருவேப்பிலையைத் தூவி மூடி இறக்கி வைக்கவும்.
குறிப்பு: தேவைப்பட்டால் முந்திரி – 5, தேங்காய் – கால் மூடி சேர்த்து அரைத்து குழம்பு இறக்கும் பொழுது ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் இறக்கினால் சுவையும் மணமும் கூடுதலாக இருக்கும்.

குடல் குழம்பு

தேவையான பொருட்கள்:
போட்டி என்ற குடல் பை – 1 முழுவதும்
மிளகாய்த்தூள் – 3 ஸ்பூன்
மல்லித்தூள் – 1 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 200 கிராம் (பொடியாக வெட்டவும்)
நாட்டுத் தக்காளி – 100 கிராம் (பொடியாக வெட்டவும்)
பட்டை – 2
புளிக்கரைசல் – 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கருவேப்பிலை – சிறிது

செய்முறை:
மிளகாய்த்தூள், மல்லித்தூள், சோம்பு, சீரகம் இவற்றை அம்மியில் வைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை தாளித்து வெங்காயம் வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுதை வதக்கி தக்காளி சேர்த்து வதக்கி அரைத்த மசாலாவையும் போட்டு எண்ணெய் மிதந்து வரும் வரை வதக்கவும். பச்சை வாசனை போன பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள குடலையும் போட்டு வதக்கி உப்பு சேர்த்து 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 8 விசில் வெந்த பிறகு, புளிக்கரைசல் ஊற்றி ஒரு கொதி வந்த பிறகு கருவேப்பிலை போட்டு மூடி வைக்கவும்.
குறிப்பு: குடலை நன்றாக உருவி சுத்தம் செய்யவும். குச்சி விட்டு திருப்பினால் வழவழப்பு அதிகமாகும். கழுவ முடியாது. இரண்டு அல்லது மூன்று முறை உருவவும். பிறகு சிறு துண்டாக நறுக்கவும். பையை கொதிக்கும் வெந்நீரில் போட்டு எடுத்து கறுப்புத் தோலை உரித்து எடுக்கவும். இதையும் பொடியாக நறுக்கவும். குடலில் சின்னச் சின்ன கல் போன்று உருண்டை, உருண்டையாக இருக்கும். அதை வெட்டி எடுக்க வேண்டும். இதை களனை என்று சொல்வார்கள். இது உடம்பிற்கு கெடுதல்.