தேவையான பொருட்கள்:
கறி – கால் கிலோ (கொந்தியது)
மிளகு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையானது
கடலைப்பருப்பு – 2 ஸ்பூன் (ஊற வைத்தது)
இஞ்சி பூண்டு விழுது – அரை ஸ்பூன்
கருவேப்பிலை – சிறிது
மிளகுத்தூள் – அரை ஸ்பூன்
எண்ணெய் – பொரிக்கத்தக்க அளவு
செய்முறை:
கறியை வேக வைத்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். பின்பு, கடலைப்பருப்பு, மிளகு, இஞ்சி, பூண்டு சேர்தது கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். இதை கறியுடன் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். நன்றாக ஆறிய உடன் கூர்மையான கத்தி கொண்டு மெல்லிய வில்லையாக வெட்டி வைக்கவும். பிறகு எண்ணெயில் கருவேப்பிலை பொரித்து எடுத்து வைக்கவும். பிறகு வெட்டிய கோலா உருண்டை சிப்சை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். சூட்டுடன் மிளகுத்தூள் தூவி உப்பு போட்டு, பொரித்து கருவேப்பிலை போட்டு நன்றாக குலுக்கி வைக்கவும். இது சுடச்சுட ரசம் சாதம் உடன் சாப்பிடவும்.
குறிப்பு: கறி கொந்தியதாக வாங்க வேண்டாம், கறி பீஸாக வாங்கி நாம் வேக வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.