Tag Archives: sheep

ஆட்டுக் குடல் குழம்பு

தேவை:
ஆட்டுக்குடல் – 1
மல்லி – 2 தேக்கரண்டி
வெங்காயம் அறுத்தது – 1 கையளவு
உப்பு – தேவையான அளவு
மிளகாய் வற்றல் – 6
சீரகம் – 3 தேக்கரண்டி
இஞ்சி – 1 சிறு துண்டு
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை:
மூன்று கப் தண்ணீரிவ் இஞ்சி சேர்த்து குடலைப்போட்டு 15 நிமிடம் வேக வைக்கவும். வத்தல், சீரகம், மல்லியை அரைத்து வெங்காயம் உப்பு கலந்து வேகும் குடலில் குழம்பு நன்கு கொதித்து குடல் வெந்ததும் வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு பொறித்துக் குழம்பில் ஊற்றி இறக்கவும்.

 

ஆட்டு நுரையீரல் கூட்டு

தேவை:
ஆட்டு நுரையீரல் – 1
கடலை பருப்பு – 150 கிராம்
மிளகாய்தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
தனியா தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
கசகசா, சீரகம் – 1 டீஸ்பூன்
தக்காளி – 2
தேங்காய் – 1/4 முடி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
சோம்பு – 1 டீஸ்பூன்

செய்முறை:
நுரையீரலை சுத்தம் செய்து நடுத்தர சைஸ்க்கு நறுக்கிக் கொள்ளவும். இதை லேசாக உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். கடலைப் பருப்பை முக்கால் வேக்காடு வேக வைக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். கசகசா, சீரகம், தேங்காய் இவைகளை நைஸாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு தாளித்து, தேங்காய் விழுதை போட்டு வதக்கி, மிளகாய், தனியா, மஞ்சள்தூள் சேர்த்து கிளறி 5 நிமிடம் கொதிக்க விடவும். தண்ணீர் அதிகம் சேர்க்கக் கூடாது. பின்பு வேக வைத்த நுரையீரல் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும் அடுத்து வேக வைத்த பருப்பை சேர்த்து ஒரு கொதியில் இறக்கி விடவும. கூட்டு கெட்டியாக இருக்க வேண்டும்.

ஆட்டுக்கால் பாயா

தேவையான பொருட்கள்:
ஆட்டுக்கால் – 4
வெங்காயம் – 2 (நீளமாக வெட்டவும்)
நாட்டுத் தக்காளி – 2 (நீளமாக வெட்டவும்)
பச்சை மிளகாய் – 6 (நீளமாக வெட்டவும்)
இஞ்சி பூண்டு விழுது – ஒன்றரை ஸ்பூன்
பட்டை, லவங்கம் – 1
ஏலக்காய் – 2
தேங்காய் – அரை மூடி
பொட்டுக்கடலை – 2 ஸ்பூன்
எலுமிச்சம் பழம் – 1
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
கால்களை 4 துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். தேங்காய், பொட்டுக்கடலையை அரைத்து வைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கி, தக்காளி, உப்பு சேர்த்து, காலையும் போட்டு நான்கு தம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 10 விசில் இறக்கித் திறந்து அரைத்து வைத்துள்ள தேங்காயை ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கி எலுமிச்சம் பழம் பிழிந்து, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
குறிப்பு: கறுப்பாக பொசுங்கும் கால்முடி வரை நன்கு சுரண்டிக் கழுவவும். கால் வேகவில்லை என்றால் தேங்காய் ஊற்றும் முன்பு மேலும் 5 விசில் வேக வைக்கவும். தேவைப்பட்டால் அரை ஸ்பூன் மல்லித்தூள் கால் வேகும் போது சேர்த்துக் கொள்ளலாம்.