தேவையான பொருட்கள்:
ஆட்டுக்கால் – 4
வெங்காயம் – 2 (நீளமாக வெட்டவும்)
நாட்டுத் தக்காளி – 2 (நீளமாக வெட்டவும்)
பச்சை மிளகாய் – 6 (நீளமாக வெட்டவும்)
இஞ்சி பூண்டு விழுது – ஒன்றரை ஸ்பூன்
பட்டை, லவங்கம் – 1
ஏலக்காய் – 2
தேங்காய் – அரை மூடி
பொட்டுக்கடலை – 2 ஸ்பூன்
எலுமிச்சம் பழம் – 1
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
கால்களை 4 துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். தேங்காய், பொட்டுக்கடலையை அரைத்து வைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கி, தக்காளி, உப்பு சேர்த்து, காலையும் போட்டு நான்கு தம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 10 விசில் இறக்கித் திறந்து அரைத்து வைத்துள்ள தேங்காயை ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கி எலுமிச்சம் பழம் பிழிந்து, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
குறிப்பு: கறுப்பாக பொசுங்கும் கால்முடி வரை நன்கு சுரண்டிக் கழுவவும். கால் வேகவில்லை என்றால் தேங்காய் ஊற்றும் முன்பு மேலும் 5 விசில் வேக வைக்கவும். தேவைப்பட்டால் அரை ஸ்பூன் மல்லித்தூள் கால் வேகும் போது சேர்த்துக் கொள்ளலாம்.