தேவை:ப
ச்சரிசி – 500 கிராம்
சோடா உப்பு, உப்பு – சிறிதளவு
தேங்காய் – 1 மூடி பால் எடுக்கவும்
புழுங்கல் அரிசி – 500 கிராம்
ஏலம் பொடி – சிறிதளவு
செய்முறை:
அரிசியை நன்றாக ஊற வைத்து நன்றாக ஆட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும். இரவு படுக்கும் முன் சிறிது உப்பு சோடா உப்பு, கலந்து வைக்கவும். காலையில் ஆப்பசட்டியில் சுடவும். தேங்காய் பாலில் சிறிது ஏலம் பொடி சேர்த்துக் கொள்ளவும். ஆப்பம் சுட்டு அதன் மேல் தேங்காய்ப்பால் ஊற்றி சாப்பிட சுவையாக இருக்கும்.
Advertisement

